
தனது குடியுரிமைச் சட்டங்களை நவீனப்படுத்தும் முயற்சியாக Bill C-3 எனும் மசோதாவை முன்வைத்துள்ளது கனடா.
இந்த மசோதாவானது நீண்ட காலமாக நிலவிய குடியுரிமை பிரச்சனையைச் சரி செய்கிறது என கனேடிய குடியேற்ற அமைச்சர் லுனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் பிறந்த, தத்தெடுக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் நன்மை கிட்டும் எனவும் முன்னைய சட்டங்களால் குடியுரிமை நீக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் மீண்டும் குடியுரிமை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
