போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!!

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!!

 ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபருக்கு எதிர் வரும் 26ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த உத்தரவானது தம்பத்தேகம நீதிமன்றத்தினால் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகரசபையின் உறுப்பினரான டிஸ்னா நெரஞ்சலவின் கணவரான குறித்த பாடசாலை அதிபர் கடந்த 5ம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவராவார்.

கடந்த மாதம் 26ம் திகதி இவர்களது மகனும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *