
இலங்கையின் மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் பெறுமதி ரூ. 310 ஐத் தாண்டியுள்ளது. இதன்படி அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 306 ரூபாய் 28 சதமாகவும் விற்பனை பெறுமதி 313 ரூபாய் 81 சதமாகவும் பதிவாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பிறகு, அமெரிக்க டொலரின் பெறுமதி 310 ரூபாயைத் தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.

