வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்களுக்கு பூட்டு!

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்களுக்கு பூட்டு!

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஆறு உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளது.குறித்த உணவகங்கள் நேற்றைய தினம் (06.02.2026) இவ்வாறு மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சுகாதார பரிசோதகர்களால் அந்த உணவங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள், பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள சைவ உணவகம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல உணவகங்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *