2026-இல் யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்

2026-இல் யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை யூடியூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் மோகன் வெளியிட்டார். இனி படைப்பாளர்கள் கேமரா முன்னால் நிற்காமலேயே, தங்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஒரு ‘AI உருவத்தை’ உருவாக்கி, அதன் மூலம் Shorts காணொளிகளைத் தயாரிக்க முடியும். இது ஓபன் ஏஐ நிறுவனத்தின் ‘Sora’ செயலி போன்ற ஒரு தொழில்நுட்பமாகும். வெறும் எழுத்து வடிவிலான கட்டளைகளை வழங்குவதன் மூலம் இந்த காணொளிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. “AI என்பது படைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இருக்குமே தவிர, அவர்களைப் பதிலீடு செய்யும் ஒன்றாக இருக்காது” என்று நீல் மோகன் உறுதியளித்துள்ளார். மேலும், வெறும் எழுத்துக்கள் மூலம் சிறிய கேம்களை உருவாக்குதல் மற்றும் இசையில் புதிய சோதனைகளைச் செய்தல் போன்ற வசதிகள் புதிதாக உட்புகுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் (Instagram Reels) உள்ளது போல, இனி யூடியூப் ஷார்ட்ஸ் பகுதியிலும் புகைப்படங்களை (Image Posts) பதிவேற்றலாம். இவை நேரடியாக சந்தாதாரர்களின் பீடில் (Feed) தோன்றும். பெரிய திரையில் (TV) யூடியூப் பார்ப்பவர்களுக்கு ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளைப்பார்க்கும் வசதியை நமக்கு விருப்பமான முறையில் மாற்றியமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ளது. அத்தோடு, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் செய்திகளுக்காக 10-க்கும் மேற்பட்ட பிரத்தியேகமான ‘YouTube TV’ திட்டங்கள் அறிமுகமாகவுள்ளன. மேலும், படைப்பாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவரது அனுமதியின்றி அவரது உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான (Deepfake) காணொளிகளை கண்டறிந்து அகற்றும் தொழில்நுட்பத்தையும், காவல்துறை முறைப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு அமைய யூடியூப் பலப்படுத்தி வருவதாகவும் நீல் மோகன் தெரிவித்துள்ளார்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *