
20 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை(wind turbine) விசையாழியை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது.புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்ட காற்றாலை விசையாழி, நாட்டின் மின்சார கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஆண்டுதோறும் 80 மில்லியன் கிலோவாட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடலில் 40 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்ட இந்த விசையாழியின் கத்தி நீளம் 14 மீட்டர் ஆகும். கட்டமைப்பின் மொத்த உயரம் 174 மீட்டர்.இது 58-மாடி கட்டிடத்திற்கு சமம்.இது சுமார் 44,000 வீடுகளின் வருடாந்திர மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது என்று ஜனவரி 14 அன்று CTG தெரிவித்துள்ளது.
