வெளிநாட்டில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்!!

வெளிநாட்டில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை வீரர்!!

 செக் குடியரசில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற Ostrava Golden Spike தடகளத் தொடரில், இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரர் Rumesh Tharanga தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற ருமேஷ் தரங்க, அபாரமான திறமையை வெளிப்படுத்தி போட்டியில் முதலிடத்தைப் பிடித்தார்.

போட்டியின் போது 86.57 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த அவர், தனது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதுடன், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு மற்றுமொரு முக்கிய வெற்றியையும் பெற்றுத் தந்தார்.

உலகின் முன்னணி தடகள வீரர்கள் பங்கேற்கும் இந்த உயர்மட்ட தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருப்பது, ருமேஷ் தரங்கவின் விளையாட்டு வாழ்க்கையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

அவரது இந்த வெற்றி, எதிர்வரும் சர்வதேச போட்டிகளிலும் இலங்கைக்கு பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளதுடன், நாட்டின் தடகள விளையாட்டிற்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ருமேஷ் தரங்கவின் இந்த சாதனைக்கு விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *