
நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் எவையும், கல்வி சீர்திருத்தத்தை சரியான முறையில் திட்டமிடவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கல்வி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு, சரியான திட்டமிடலின்மையே பிரதான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

