
சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 43 வயதான கங்கணமலகே திலக் சோமச்சந்திர மற்றும் 46 வயதான தேவநிதிகே பிரியந்த சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த 9 ஆம் திகதி வேலனா சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆலோசனை பெற்ற பின்னர், இரண்டு இலங்கையர்களும் மாலைதீவு பொலிஸாரால் விடுவிக்கப்பட்டனர்.இருப்பினும், இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

