அடுத்த பூமி தயாரா? தமிழ் விஞ்ஞானியின் உலகளாவிய சாதனை

அடுத்த பூமி தயாரா? தமிழ் விஞ்ஞானியின் உலகளாவிய சாதனை

பிரபஞ்சத்தின் ஆதி இரகசியங்களையும், பூமி எவ்வாறு உருவானது என்பதையும் கண்டறியும் முயற்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் விஞ்ஞானி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக (McGill University) வானியற்பியல் விஞ்ஞானியுமான முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண்வெளியில் ஒரு பிரமிக்கத்தக்க நிகழ்வைக் கண்டறிந்துள்ளனர்.விண்வெளியில் ஒரு ‘வால் நட்சத்திரக்’ கிரகம்: WASP-107bபூமியிலிருந்து சுமார் 210 ஒளி ஆண்டுகள் தொலைவில், கன்னி விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள WASP-107b என்ற பிரம்மாண்டமான புறக்கோளை இவர்கள் ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வின்போது, அந்தக் கோளின் வளிமண்டலத்திலிருந்து ஹீலியம் வாயு மிகவேகமாக ஆவியாகி வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், அந்த கோள் தனது நட்சத்திரத்தைச் சுற்றி வரும்போது, ஒரு வால் நட்சத்திரத்தைப் போலவே தனக்குப் பின்னால் பிரம்மாண்டமான வாயு மேகத்தை இழுத்துச் செல்கிறது.இந்த வாயு வால், அந்த கிரகத்தின் அளவை விட 10 மடங்கு நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.பூமியின் ஆரம்பகால நிலையை இது பிரதிபலிக்கிறதா?இந்தக் கண்டுபிடிப்பு வெறும் வானியல் நிகழ்வு மட்டுமல்ல, இது பூமியின் பிறப்பு குறித்த பல கேள்விகளுக்கு விடையளிப்பதாக உள்ளது என முனைவர் விக்னேஷ்வரன் விளக்குகிறார்.”பூமியும் அதன் ஆரம்பக் காலத்தில் இதுபோன்ற அதிகப்படியான ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்களைக் கொண்டிருந்திருக்கலாம்.சூரியனின் வெப்பத்தால் அந்த வாயுக்கள் வெளியேறிய பிறகுதான், நீர் மற்றும் உயிரினங்கள் தோன்றுவதற்குத் தேவையான மூலக்கூறுகள் நிலைபெற்றிருக்க வேண்டும்,” என அவர் தனது கருதுகோளை முன்வைக்கிறார்.எதிர்காலத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதா?தற்போது இந்த புறக்கோளில் நடக்கும் மாற்றங்கள், அது ஒரு வாழத்தகுந்த கிரகமாக மாறுவதற்கான ஆரம்பக்கட்டப் பணியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.வளிமண்டலத்தில் உள்ள தேவையற்ற வாயுக்கள் முழுமையாக வெளியேறினால், அங்கு தண்ணீர் மற்றும் உயிர் மூலக்கூறுகள் உருவாக வாய்ப்புள்ளது.இருப்பினும், இது உறுதியாக நடக்குமா என்பதை அறிய இன்னும் பல ஆண்டுகள் தொடர் ஆய்வுகள் தேவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *