அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் – முறைப்பாடு பதிவு!!

அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் – முறைப்பாடு பதிவு!!

 நாட்டு மக்களை கொந்தளிக்க செய்துள்ள அநுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகய ஹேமரத்ன  தேரரால் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் பொலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் வெள்ளிக்கிழமை (29) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளது.

சிறுமி மீதான துஷ்பிரயோக வழக்குக்கு நீதி கோரியும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தியும் நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று தினங்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *