அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு!!

அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியதாக ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு!!

ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறியுள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜிவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நீதிமன்ற அமைப்பின் திறனை அதிகரிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று எந்தவொரு அறிக்கையிலோ அல்லது தரப்பிலோ முன்மொழியப்படாத நிலையிலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்குத் தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

வெற்றிடங்களை நிரப்பாமல் இந்த வயதெல்லை நீடிப்பை மேற்கொள்வது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் நேரடி அரசியலமைப்பு மீறல் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நிலவும் 8 நீதிபதி வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. வழக்கமாக ஒரு நீதிபதி ஓய்வுபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அடுத்த நியமனத்திற்கான பெயரை ஜனாதிபதி பரிந்துரைப்பதே மரபு. ஆனால், அந்த அரசியலமைப்பு கடமையை ஜனாதிபதி செய்யத் தவறியுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

நிலுவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்பாமல், வேறு வழிகளில் நீதித்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசு முயல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *