
இளம் பெண்களின் போலிப் புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் வழியாக செய்யப்படும் மோசடி வழக்குகள் குறித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் வந்துகொண்டிருப்பதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது
.இவ்வாறு பராமரிக்கப்படும் சமூக ஊடகக் கணக்குகளுக்கு, உணர்வுப்பூர்வமான புகைப்படங்களையோ அல்லது காணொளிகளையோ அனுப்புவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
