நலன்புரி நன்மைகளில் மாற்றம்!!

நலன்புரி நன்மைகளில் மாற்றம்!!

 இலங்கையில் நடைமுறையில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவிபெறும் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் தற்போது நிலையான வருமானம் பெறும் நிலைக்குத் முன்னேறியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, 2027 முதல் 2029 வரையிலான காலப்பகுதியில் அந்தக் குடும்பங்களை படிப்படியாக நலன்புரி கொடுப்பனவுகளில் இருந்து விடுவிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, மக்களை நீண்டகால நலன்புரி உதவிகளில் தங்கவைக்காமல், தற்சார்பு பொருளாதார நிலைக்கு கொண்டு வருவதே அரசின் நோக்கம் என தெரிவித்தார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *