கொழும்பு புறநகர்ப் பகுதியில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!

கொழும்பு புறநகர்ப் பகுதியில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!!

 கொழும்பு புறநகர் பகுதிகளை புனரமைப்பது தொடர்பான பணிகளை இலங்கை நில அபிவிருத்தி கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை மற்றும் மாகாண சபைகள் ஆகியவை கூட்டாக ஆரம்பித்துள்ளன.

வெள்ள அபாயத்தைக் குறைப்பது, நீர் வடிகால் பணிகளைத் துரிதப்படுத்துவது, நகரச் சூழலைப் பாதுகாப்பது மற்றும் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப் பேரிடர்களுக்கு நீண்டகால, நீடித்த தீர்வுகளை வழங்குவதை இச்செயற்றிட்டம் நோக்காகக் கொண்டுள்ளது.

வெள்ள அபாயம் உள்ள பல பகுதிகளில் 31 கால்வாய்ப் பாதைகளையும் அதனுடன் தொடர்புடைய நீர் வடிகால் அமைப்புகளையும் பராமரித்து புனரமைப்பதற்காக, நகர அபிவிருத்தி அமைச்சு 218 மில்லியன் ரூபா மதிப்பிலேயே இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

கொலன்னாவ, களனி, மட்டக்குளிய, மீத்தோட்டமுல்ல மற்றும் கொட்டிக்காவத்த-முல்லேரியாவ ஆகிய இடங்களில் குறித்த புனரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

குறித்த புனரமைப்புத் திட்டங்களை அண்மையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, அனைத்துப் பணிகளும் இந்த ஆண்டின் ஒக்டோபருக்குள் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *