பளையில் இடம் பெறவுள்ள நாடக நிகழ்வு!!

பளையில் இடம் பெறவுள்ள நாடக நிகழ்வு!!

 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் பாரம்பரிய கூத்து இசைநாடக கலைஞர்களும் இணைந்து நடாத்தும் இசை நாடக கூத்து பெருவிழாவானது நாளை (08.06.2026 ) பளை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்திகழ்வில் சத்தியவான் சாவித்திரி, ஞானசவுந்தரி, அரிச்சந்திர மயான காண்டம், காத்தவராயன் கூத்து ஆகிய நாடகங்கள் மேடையேறவுள்ளன.

முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் உயய்திரு. நா.வேதநாயகன் அவர்கள்  கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்விற்கு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ. த. ஜெயசீலன் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *