இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்!!

இன்று இரவு வானில் தோன்றவுள்ள அதிசயம்!!

 இன்று (12.08.2026) இரவு சுமார் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய விண்கல் மழை எனக் கூறப்படும் ‘பெர்சீட்’ (Perseid) விண்கல் மழை, வானில் உச்சத்தை அடையவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெர்சீட் விண்கல் மழையானது, 109P/Swift-Tuttle என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசித் துகள்கள் வழியாக பூமி பயணிக்கும் போது உருவாகிறது.

இந்தச் சிறிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்துக்குள் மிக வேகமாக நுழையும்போது, வளிமண்டலத்துடனான உராய்வினால் வெப்பமடைந்து ஒளிர்கின்றன.

இரவு வானில் காணப்படும் இந்த ஒளிரும் தடங்களே பொதுவாக ‘விண்கல் மழை’ என அழைக்கப்படுகின்றன.

இன்றைய பெர்சீட் விண்கல் மழையின் போது, வானிலை மற்றும் வானத்தை மறைக்கும் நிலைமைகள் சாதகமாக இருந்தால், ஒரு மணி நேரத்தில் 50 முதல் 100 வரையிலான விண்கற்களைக் காணக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் வானியல் பிரியர்களுக்கு இது வானில் காணக்கூடிய குறிப்பிடத்தக்க இயற்கைக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒளி மாசு குறைந்த பகுதிகளிலிருந்து, நகர்ப்புற விளக்குகளிலிருந்து விலகி, திறந்த வானத்தை நோக்கிப் பார்ப்பதன் மூலம் இந்த விண்கல் மழையை அவதானிக்க முடியும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *