எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா!!

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுமா!!

 இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருணா கூறுகையில்,

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை அடுத்து உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்வு போக்கினை காட்டுகின்றன.

இருந்த போதிலும், இந்த மாதம் உள்ளூர் எரிபொருள் விலைகளில் திடீர் உயர்வு எதுவும் இருக்காது.

உலகளாவிய எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப உள்ளூர் எரிபொருள் விலைகளை மாற்றியமைப்பது குறித்து தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *