
கிளிநொச்சி நகர் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு நேற்றிரவு எட்டு மணியளவில் டிப்பர் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் எரிபொருளை நிரப்பிய பின்பு வாகனத்தை முன்னோக்கி விடுமாறு எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர் கூறிய போது பணியாளருடன் முரண்பட்டு சென்ற குறித்த டிப்பர் வாகன சாரதி சிறிது நேரத்தின் பின்பு ஐந்து பேருடன் வருகை தந்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், முகாமையாளர், பணியாளர், வாடிக்கையாளர் மீது கத்தி குத்து மற்றும் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.