கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சியில் கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுமி உயிர் மாய்ப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கல்வியில் சிறந்து விளங்கிய மாணவியின் இழப்பு தமிழர் தாயகம் எங்கும் கவலையை ஏற்படுத்துகின்றது.

பாடசாலை கல்வியில் கல்வி, கலை, விளையாட்டு போன்ற இணைப்பாட விதான செயற்பாடுகளோடு மாணவர்களுக்கு உளநலன் சார்ந்த கற்கைகளும் இனிவரும் காலங்களில் இணைக்கப்பட வேண்டும் எனவும் 

வாழ்வியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கரிசனையுடன் செயற்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.எனவும் சமூக ஆர்வலலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *