பேருந்தில் பயணித்த சிறுமியிடம் இராணுவச் சிப்பாய் அத்துமீறல்!!

பேருந்தில் பயணித்த சிறுமியிடம் இராணுவச் சிப்பாய் அத்துமீறல்!!

 பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த சிறுமி ஒருவர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி, பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் செல்வதற்காக சிறிய தந்தையாருடன் பேருந்தில் ஏறிய வேளை, மன்னம்பிட்டி பகுதியில் அருகில் அமர்ந்திருந்த இராணுவச் சிப்பாயால் பாலியல் அத்துமீறலுக்கு உட்பட்டுள்ளார். 

இதனை சிறிய தந்தையாரிடம் தெரிவித்த வேளை,  சிறிய தந்தையார், இராணுவச்சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.  

அவ்வேளை ஏற்பட்ட களேபரத்தில் சாரதி உடடியாக பொலிஸ் நிலையத்திற்கு வாகனத்தை கொண்டு சென்றவேளை, சிறுமியின் சிறிய தந்தையார் கைது செய்யப்பட்டு, இராணுவச் சிப்பாய் காப்பாற்றப்பட்டுள்ளார். 

இராணுவச் சிப்பாய் சிகிச்சை முடிந்து வெளியேற முற்பட்ட வேளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாயை வெள்ளிக்கிழமை (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *