
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொறியியல் தலைவராகப் பணியாற்றினார்.
இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பான மேலாளராகவும் (Accountable Manager) பணியாற்றி வந்த இவர், தற்போது இப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த விபுல் மிஸ்ரா, விமானப் பொறியியல் மற்றும் சிரேஷ்ட விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் பரந்த அனுபவம் கொண்டவராவார்.
