இலங்கை தகவல் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல்!!

இலங்கை தகவல் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல்!!

 இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பில் பெரும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.

2025 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் குறித்த மதிப்பாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவினால் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பரிசோதிக்கப்பட்ட 56 முக்கிய அம்சங்களில், 46 அம்சங்களில் உயர் மட்டத்திலான பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது.

சைபர் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்து முக்கியமான ரகசியத் தகவல்களைத் திருடுதல், நாடாளுமன்றத்தின் அன்றாட செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதள உள்ளடக்கங்களைச் சிதைத்து நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துதல் போன்ற ஆபத்துகள் நிலவுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற நிர்வாகம் உடனடியாகத் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *