பதவி விலகும் வெளிநாட்டு முக்கியஸ்தர்!!

பதவி விலகும் வெளிநாட்டு முக்கியஸ்தர்!!

 பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆளும் தொழிற்கட்சியின் ஆதரவை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து விலகி சுமார் ஆறு வாரங்களே நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தான் வகித்து வந்த லண்டன் ‘ஹோல்பர்ன் மற்றும் சென் பாங்க்ராஸ்’ தொகுதிக்கான எம்.பி பதவியிலிருந்து விலகி, இனி சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிற்கட்சியைப் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்து பிரதமரான போதிலும், உள்நாட்டுக் கொள்கைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் மக்களின் ஆதரவு வீழ்ச்சி காரணமாக அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது.

எனினும், பிரான்ஸ் மற்றும் சீனாவுடனான உறவுகளைச் சீரமைத்தல், உக்ரைனுக்கான ஆதரவு மற்றும் பாலஸ்தீன நாட்டை அங்கீகரித்தல் போன்ற சர்வதேச விவகாரங்களில் அவரது இராஜதந்திர நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தன.

கெய்ர் ஸ்டார்மரைத் தொடர்ந்து அண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *