இலங்கையில் தொடரும் பட்டினி அவலம்!!

இலங்கையில் தொடரும் பட்டினி அவலம்!!

 இலங்கையில் தற்போதைய நிலையிலும் ஐவரில் ஒருவர் பட்டினியால் வாடும் அவலம் தொடர்பாக உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதியளவான ஊட்டச் சத்துள்ள உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஜியோர்கே சர்கீசியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொருளாதார ஸ்திரத்தன்மை, பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல் ஆகிய இரண்டு விடயங்களும் ஒன்றல்ல என்பதைப் பல இலங்கை மக்கள் அன்றாடம் உணர்ந்து வருகின்றனர்.

தனிநபர் வருமானம் ஓரளவுக்கு ஸ்திரநிலைக்கு மீண்டு வந்தாலும், பலரின் ஊதியம் இன்னும் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டவில்லை.

மேலும், தொழில் சந்தை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. குறிப்பாகப் பெண்கள் இதில் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

திறன்மிக்க பொருளாதார சீர்திருத்தங்கள்’ தடையின்றித் தொடர வேண்டும்.

டித்வா சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி போன்றவை இலங்கையின் பொருளாதார மீட்புப் பயணத்தைச் சவாலானதாக மாற்றியுள்ளது. எனவே, பொருளாதார மீட்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது.

பொருளாதார ரீதியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் பிரதிபலிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதற்காக தனியார் துறையின் பங்களிப்புடன் கூடிய தொழில் வாய்ப்புகளைத் துரிதமாக உருவாக்க வேண்டுமென்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *