முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

முக்கிய செய்திகளின் தொகுப்பு!!

ஹரக்கட்டா தொடர்பான வழக்கு விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதம மந்திரி மற்றும் தேசிய பாதுகாப்புக்கான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகப் பணியாற்றிய சாகல ரத்நாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹரக்கட்டா மீதான தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்கி, அவரை ஒரு வழக்கமான சிறைக்கு மாற்றுவதற்காக 120 மில்லியன் ரூபா இலஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

ஹெரத் முதியன்செலாவின் கார்னர் வடிவமைப்பாளரான இந்திரஜித் பண்டாரா, என்றழைக்கப்படும் ஹெர்பி என்பவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட விசாரணையின்போது இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அம்பாறை கல்முனைக்குடி பிரதான வீதியில் கதிர்காம பாதயாத்திரை குழுவினருடன் வந்த ‘சுப்பிரமணியன்’ என அழைக்கப்படும் நாயை உதைத்த நபர் ஒருவர் கல்முனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சுப்பிரமணியை உதைத்துத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 21 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் இந்த நாயை உதைக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பல தரப்பினரின் கண்டனங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கமைய, கல்முனை தலைமையகப் பொலிஸார் குறித்த சந்தேக நபரை அன்றைய தினமே கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணை அடுத்த 30 நாட்களுக்கு ஈரானின் முழுமையான மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஆளில்லா விமானம் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்கா இரண்டாவது நாளாக ஈரான் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

ஈராக் தலைநகர் பக்தாத்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அப்பாஸ் அராக்சி, அங்குள்ள தனது ஈராக் நாட்டு வெளியுறவு அமைச்சருடன் இணைந்து நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், “ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாக விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிட வேண்டாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *